274 Views
இலங்கை கடல் எல்லையில், அவுஸ்திரேலியாவினால் கடல் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிகப்பதற்காக, கடல்சார் எதிர்வுகூறல் கட்டமைப்பை அமைப்பதற்கு 5 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் பெறுமதியான முதலீடு செய்யப்பட்டுள்ளது.
மேற்கு அவுஸ்திரேலிய பல்கலைகழகத்தின் தலைமையில், நாட்டின் சில நிறுவனங்களுடன் இணைந்து, இந்த கடல்சார் எதிர்வுகூறல கட்டமைப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, மீன்பிடி, கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட சமுத்திரவியல் செயற்பாடுகளை நடைமுறைப்படுத்த வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தின் பிரதிபலிப்பாக குறித்த திட்டம் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.