பேரினவாதக் கட்சிகளின் வடபகுதி பிரச்சார உத்திகள்

தென்னிலங்கையின் பேரினவாத கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சிறீலங்கா சுதந்திரக்கட்சி ஆகிய கட்சிகள் வடபகுதி மக்களை ஏமாற்றுவதற்காக புதிய வகை பிரச்சார உத்திகளை கடைப்பிடித்துவருவதாக யாழ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் விநாயகமூர்த்தி சகாதேவன் முச்சக்கர வாகனத்தில் நின்றவாறு சந்திக்கு சந்தி வீதிகளால் செல்லும் மக்களிடம் வாக்குகளை கேட்டு வருகின்றார்.

அதேசமயம் சுதந்திரக்கட்சியின் வேட்பாளரான அங்கஜன் இராமநாதன் சிறீலங்கா அரசு மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை தான் மேற்கொண்டதாக தெரிவித்து விளம்பர பதாதைகளை வைத்துள்ளார்.