”செம்மணியில் எங்கள் கண்மணிகள்” வடமாகாணம் முழுவதும் பயணிக்கும் தெருவெளி நாடகம்!

செம்மணியில் புதைக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்கான உண்மையையும் நீதியையும் உலகிற்கு எடுத்துக்கூறுவதுடன், செம்மணி படுகொலையின் வரலாற்றை அடுத்த தலைமுறையினருக்கு மறக்காமல் கடத்தும் நோக்கில் “செம்மணியில் எங்கள் கண்மணிகள் ” என்ற நாடகம் வடமாகாணம் முழுவதும் ஆற்றுகைப்படுத்தப்பட்டு வருகின்றது.

கலைப்புலவர் ஜெயம் ஜெகன் எழுத்துரு, பாடல் வரிகள் மற்றும் நெறியாள்கையில் உருவாக்கப்பட்டுள்ள இந்நாடகம், அரங்கத்திற்குள் மட்டுப்படுத்தப்படாமல் மக்களோடு மக்களாகவும், மாணவர்களிடம் நேரடியாகவும் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.

வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 இடங்களில் மக்களினதும், மாணவர்களினதும் பார்வைக்காக நாடக ஆற்றுகைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.