இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு தப்பிச்சென்றவர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தப்பிச்சென்றவர்  மண்டபம் அகதிகள் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபருக்கு எதிராக இலங்கையில் குற்ற வழக்குகள் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மன்னாரை சேர்ந்த 22 வயதான  நபர் ஒருவரே கரையோர பாதுகாப்பு  காவல்துறையினரால் மண்டபம் முகாமில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நபரின் தந்தை ஏற்கனவே தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள நிலையில், மண்டபம் அகதி முகாமில் தங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.   தற்போது  எதிராக தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.