சீனாவில் நில நடுக்கம் 40க்கும் மேற்பட்டோர் பலி  

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில்நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

லுடிங் நகரில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.