பலாலி விமான நிலையத்திலிருந்து அனைத்துலக விமானங்களை இயக்குவதற்கான அனைத்துலக வான் போக்குவரத்து சங்கத்தின் (IATA) அனுமதி கிடைத்துள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரி தெரிவித்தார். அத்துடன் பலாலி விமான நிலையத்திற்கான தனித்துவமான குறியீடாக JAF என்பதையும் வழங்கியுள்ளது.
தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்கும் நோக்கில் பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த மாதம் பலாலியிலிருந்து தென்னிந்தியாவிற்கு விமான சேவைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன.