சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா?

சிறிலங்காவின் அடுத்த இராணுவத் தளபதியாக ஷவேந்திர சில்வா பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனநாயக்க தனது சேவையை நீடிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு ஜனாதிபதி சரியான பதிலை அளிக்கவில்லை. இவரின் பதவி எதிர்வரும் ஓகஸ்ட் 18 அன்று நிறைவடைகின்றது.

இப்போதைய  இராணுவத் தளபதி ஓய்வு பெற்றால் அடுத்து மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா பதவியை பொறுப்பேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.