சிறிலங்கா வந்து சென்ற மர்ம விமானம்

கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு சில தினங்களுக்கு முன்னர் வருகை தந்திருந்த பெயர் குறிப்பிடப்படாத விமானம் தொடர்பான மர்மம் நீடித்து வருகின்றது. எந்தவொரு நாட்டினதும் இலச்சினைகள் இல்லாது, குறித்த விமானம் வந்து சென்றதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால கேட்டுக்கொண்டுள்ளார். பாதுக்க பிரதேசத்தில் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போது, நேற்று (25) கேட்டுக்கொண்டார்.

குறித்த விமானம் சிலநாட்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்து மீளவும் கிளம்பிச் சென்றுள்ளது. இந்த விமானம் எந்த நாட்டிற்குரியது, எதற்காக வருகை தந்தது,  இதில் வந்தவர்கள் யார்? போன்ற தகவல்கள் இன்றுவரை வெளியிடப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.