கன்னியாவில் முஸ்லிம்கள் பிரதேசங்களும் உள்ளன – உலமா சபை

கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் முஸ்லிம் அடையாளங்கள் உள்ளதாகவும், முஸ்லிம்களே அதனை பாதுகாத்ததாகவும் முஸ்லிம் உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

கன்னியா என்பது தமிழ் பேசும் மக்களின் éமியாகும். இங்கு காலகாலமாக தமிழர்களும், முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள். கன்னியா வெந்நீரூற்று கிணற்றிற்கு அருகில் ஒரு சிறிய பள்ளிவாசலும் 40 அடி இரு முஸ்லிம் சமாதிகளும் இருக்கின்றன. இவை பல்லாயிரம் வருடத்திற்கு முந்தியவை. இவை இராவணன் மற்றும் அவனின் தாயின் சமாதி என சீக்கிய ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

இராவணன் இந்துவா, முஸ்லிமா என்பதில் கருத்து வேறுபாடு இருப்பினும், இந்த சமாதிகளை பாதுகாத்து வந்தவர்கள் முஸ்லிம்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1990ஆம் ஆண்டு கன்னியாவிற்கு முஸ்லிம்கள் இடம்பெயர்ந்த போது பள்ளியும், சமாதியும் சிதைக்கப்பட்டன. இதனை சிங்களவர்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளனர். இதற்கு ஐ.தே.க. ஆதரவளிப்பது கண்டிக்கத்தக்கது.

இதேவேளை கன்னியாவில் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராடிய தமிழ் மக்கள் மீது வெந்நீர் ஊற்றியமை மிகமோசமான இனவாத செயற்பாடாகும். இந்த ஆக்கிரமிப்பை தமிழ் பேசும் சமூகம் இணைந்து கண்டிக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.