தமிழ் அரசியல் கைதி சிறையில் உண்ணாவிரதம்

புதிய மகசீன் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதியான,   திரைப்படக் கூட்டுத்தாபன முன்னாள் பணிப்பாளரான கனகசபை தேவதாசன் என்பவர் பிணை கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

2008  ஜனவரி கைது செய்யப்பட்ட கனகசபை தேவதாசன் மீது கொழும்பு நீதிமன்றில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, அதில் ஒரு வழக்கில்  ஆயுள் தண்டனையையும் மற்றைய வழக்கில் 20 வருட கடூழிய சிறைத்தண்டனையையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணையின் போது சட்டத்தரணிகள் இன்றி தாமே வாதாடியதாகவும், அதனால் போதுமான சாட்சியங்களைத் திரட்ட முடியாது போனதாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதி கூறியிருந்தார்.