அமெரிக்காவே மத்திய கிழக்கில் பதற்றத்திற்கு காரணம் – ஈரான்

மத்திய கிழக்கில் உள்ள தனக்கு சார்பான நாடுகளுக்கு பெருமளவான ஆயுதங்களை விற்பனை செய்யும் அமெரிக்கா, ஏனைய நாடுகளின் பாதுகாப்பு தொடர்பில் கட்டுப்பாடுகளை விதிப்பது மத்திய கிழக்கில் பதற்றத்திற்கான காரணம் என ஈரானின் வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் சரீப் கடந்த திங்கட்கிழமை (15) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மத்திய கிழக்கில் மிகப்பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளதாரத் தடைகள் நீக்கப்பட்டு, 2015 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஆணுவாயுத உடன்பாட்டில் அமெரிக்கா மீண்டும் இணைந்தாலே நாம் பேச்சுகளை மீண்டும் ஆரம்பிப்போம்.

நீண்டதூர ஏவுகணைகள் தொடாபில் பேசுவதானால் அதற்கு முன்னர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் பேச வேண்டும்.

82 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட நாம் 16 பில்லியன் டாெர்களை ஆயுதங்களுக்கு செலவிட்டுள்ளோம், ஆனால் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட ஐக்கிய அரபு இராட்சியம் 22 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. எமது மக்கள் தொகையில் அரை பங்கு மக்கள் தொகையை கொண்ட சவுதி அரேபியா 67 பில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது. அவர்கள் அமெரிக்காவின் ஆயுதங்களையே வாங்கியுள்ளனர்.

இந்த ஆயுதங்கள் தான் இந்த பிராந்தியத்தில் பதற்றத்தை தோற்றுவித்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.