தொடரும் இந்திய அரசின் வன்முறை- நளினியை நீதிமன்றில் ஆஜர்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள நளினியை ஜுலை 5ஆம் திகதி சென்னை உயர் நீதிமன்றில் ஆஜர்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சிறைத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகளின் திருமணத்திற்காக நளினி 6 மாதங்கள் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவரே வாதிட வசதியாக அவரை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.

அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பாதுகாப்புச் சிக்கல்கள் உள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து,  இதனை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள், நீதிமன்றில் ஆஜராக விரும்பும் ஒருவரை இவ்வாறு தடுக்க முடியாது. எனவே அவரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த சிறைத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்காக வீடியோ சந்திப்பின் மூலம் சந்திக்க ஒழுங்குபடுத்தி தருவதாக காவல்துறை தரப்பில் தெரிவித்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத நீதிபதிகள் எதிர்வரும் ஜுலை 5ஆம் திகதி பி.ப.2.15 மணிக்கு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த உத்தரவிட்டதுடன், 50 காவலர்களை அழைத்து அவரின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், நிர்மல்குமார் ஆகியோர் இந்த வழக்கின் நீதிபதிகளாக பணியாற்றினர்.

வட இந்தியர்களுக்கு ஒரு நீதியும்இ தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் எனச் செயற்பட்டுவரும் இந்திய அரசு ஈழத்தமிழ் மக்களுக்கு தொடர்ந்து இழைத்துவரும் அநீதி மற்றும் ஜனநாயக விரோதச் செயற்பாடுகளின் இந்த நூற்றாண்டின் உதாரணமாக நளினி உள்ளது குறிப்பிடத்தக்கது.

சல்மான்கானுக்கு ஒரு நீதியும்இ தமிழ் மக்களுக்கு ஒரு நீதியும் உள்ள இந்திய ஒன்றியத்தில் தற்போது தமிழகம் பிரிவினையை நோக்கி நகர்ந்து வருவதை அவதானிக்க முடிவதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.