யாழ்.மாநகரசபை உறுப்பினராக அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர்

அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர் யாழ். மாநகரசபை உறுப்பினர்களாக பதவியேற்கின்றனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்.மாநகர சபைக்குத் தெரிவான அஜந்தா தனபாலசிங்கம் மற்றும் சுகந்தினி சிறிதரன் ஆகியோர் கடந்த மே மாதம் தமது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து கொண்டனர்.

இதையடுத்து இந்த வெற்றிடத்திற்கு அக்கட்சியின் சார்பில் டெய்சி பிலிப் ஜெயரஞ்சன், தர்சிபா லவகீசன் ஆகியோரின் பெயர்கள் தேர்தல் ஆணையாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் இவர்கள் இருவரினது பெயர்களும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.