எங்கள் நிறுவனம் எந்த மின்னஞ்சலையும் அழிக்கவில்லை என்பதை எங்களால் உறுதியாக தெரிவிக்கமுடியும் என X-PRESS PEARL கப்பலின் உள்ளுர் முகவரான சீ கொன்சேர்ட்டியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கப்பலில் நைட்ரிக் அசிட் கசிவு காணப்படுகின்றது என சர்வதேச கடற்பரப்பில் கப்பல் நின்றவேளை இலங்கைக்கு தகவல் வழங்கினோம் எனவும் அந்த நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். சண்டே டைம்ஸிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.