ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் வழங்கும்-பிரித்தானியா அறிவிப்பு

உலகின் பிற நாடுகளுக்கு நூறு கோடி தடுப்பூசிகளை ஜி-7 நாடுகள் அளிக்கும் என பிரித்தானியா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 50 கோடி தடுப்பூசிகளை அளிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பிரித்தானியா மட்டும் சுமார் 10 கோடி  கொரோனா தடுப்பூசிகளை வழங்கும் என்று அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

முதல் 50 இலட்சம் தடுப்பூசிகளை வரும் செப்டம்பர் மாதத்துக்குள்ளாகவும் மேலும் 2.5 கோடி தடுப்பூசிகளை ஆண்டு இறுதிக்குள்ளாகவும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.