சுற்றுலாவிற்கான சர்வதேச விண்வெளி நிலையத்தை நாசா திறக்கவுள்ளது

நாசா  நிறுவனம் திறக்கவுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில் பயணிகள் ஒரு இரவு தங்குவதற்கு 35,000 அமெரிக்க டொலர்களை அல்லது 27,500 யூரோகளை அறவிடவுள்ளது. இது 2020ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஒரு வருடத்தில் 2 தடவைகள் பயணிக்க முடியும் என ஐ. எஸ்.எஸ் இன் துணை இயக்குநர் றொபின் கற்றென்ஸ் கூறினார்.

அமெரிக்க விண்வெளி ஓடத்தில் பயணித்து, 30 நாட்கள் வரை தனியார் விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் அனுமதிக்காமல் இருந்த, வணிக முயற்சிகளுக்கும், சந்தைப்படுத்தலுக்கும் சர்வதேச விண்வெளி நிலையத்தை திறக்கவுள்ளது என இதன் தலைமை நிதி அதிகாரி ஜெஃப் டி விற் நியூயோர்க்கில் தெரிவித்தார்.

விண்வெளி சுற்றுலா செல்வோர் அங்கு செல்வதற்கான   மருத்துவ மற்றும் பயிற்சியினை உறுதிப்படுத்துவதோடு, எத்தனை பேர் செல்லலாம் என்பதையும் தனியார் வணிக நிறுவனத்தின் குழுவினரே தீர்மானித்துக் கொள்வர்.

நாசா விண்வெளி வீரர்களை, தங்கள் விண்கலங்கள் மூலம் விண்வெளி நிலையத்திற்கு அனுப்புவதற்கு ஒருமுறை பறக்க 60 மில்லியன் டொலர் கட்டணம் விதிக்கின்றன. இந்த தனியார் விண்வெளி நிறுவனங்கள் தனியார் விண்வெளி வீரர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அழைத்துச் செல்லவும் இதேயளவு கட்டணத்தை இந்த நிறுவனங்கள் வ#லிக்கும் என்று தெரிகின்றது.

எலோன் மஸ்ஸின் ஸ்பேஸ் எக்ஸ், நிறுவனம் தயாரித்துள்ள டிராகன் காப்ஸ்யூல் மற்றும் போயிங் கட்டமைத்து வரும் ஸ்ரார் லைனர்  விண்கலம் இரண்டையும் நாசா பயன்படுத்திக் கொள்ளும்.

இதுவரை விண்வெளி நிலையத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுத்து வந்த நாசா, விண்வெளி வீரர்கள் ஆதாயம் தரக்கூடிய ஆய்வுகளில் பங்கு பெறுவதற்கும் தடை விதித்து வந்தது.

1998 இல் ரஷ்யாவின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிலையம் நாசாவிற்கு சொந்தமானதல்ல.  இதை வர்த்தக நோக்கோடு செயற்படாது, விண்வெளி வீரர்களின் பயன்படுத்துவதற்காகவும் இதை தடை செய்திருந்தது.

தற்போது ரஷ்யாவுடனான வர்த்தக ஏற்பாடுகளை தளர்த்தியதால், இதை அமெரிக்கா அனுமதித்துள்ளது.  2001 ஆம் ஆண்டில் அமெரிக்கத் தொழிலதிபர் டென்னிஸ் டிட்டோ 20 மில்லியன் டொலர்களை ரஷ்யாவிற்கு வழங்கி தனது முதல் பயணத்தை மேற்கொண்டிருந்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை வெளியிட்ட போது, இந்த விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்படும் நிதியுதவி 2025 ஆம் ஆண்டளவில்  நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டளவில் மீண்டும் சந்திரனுக்கு செல்ல முதல் முறையாக பெண் ஒருவரையும், ஆண் ஒருவரையும் அனுப்பவுள்ளதாக      நாசா அறிவித்திருந்தது.