25 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம்- மரணச் சடங்குகள் தொடர்பில் அரசு விடுத்துள்ள புதிய அறிவிப்பு

ஒருவர் மரணித்தால் 24 மணித்தியாலத்தில் குறித்த மரணச்சடங்கு நிறைவேற்றப்பட வேண்டும் எனச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அல்லாத மரணச் சடங்குகளே இவ்வாறு இடம்பெற வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மரணச் சடங்கொன்றில் ஒரே நேரத்தில் ஆகக் குறைந்தது 25 பேர் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்றும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.