மியான்மரிலிருந்து வெளியேறுபவர்களுக்கு பாதுகாப்பு: மலேசியா கருத்து

மியான்மரில் நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறுபவர்களுக்கு தஞ்சம் மற்றும் பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக ஆசியான் உறுப்பு நாடுகள் பரிசீலிக்கலாம் என மலேசிய தரப்பிலிருந்து ஆசியான் மனித உரிமைகள் ஆணையகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நெருக்கடி முடிவுக்கு வரும் வரை இதை தற்காலிக நடவடிக்கையாக மேற்கொள்ள ASEAN Intergovernmental Commission on Human Rights மலேசிய பிரதிநிதி Eric Paulsen வலியுறுத்தியுள்ளார். குறைந்தபட்சம் ஆசியான் உறுப்பு நாடுகள் இந்த சுமையை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள விவாதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.