ஹிஸ்புல்லா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டபோதே அவர் நீதிமன்றத்தையும் நீதித்துறையையும் தரக்குறைவாக பேசியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சட்டத்தரணி இந்திரசிறி சேனாரத்ன என்பவரே முன்னாள் ஆளுநருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஜனாதிபதி சட்டத்தரணி உப்புள் திசாநாயக்கவூடாக முன்வைத்துள்ளார்.

2019 ஆம் ஆண்டு மே 13 ஆம் திகதியன்று தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த வேளை குறித்த அலைவரிசையொன்றில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ‘டோக் வித் சத்துர’ எனும் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஆளுநர் நீதித்துறை தொடர்பில் தரக்குறைவாக பேசியதாக மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவின் இக்கருத்தானது நீதித்துறைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக அவரை அரசியலமைப்பின் 105(3) சரத்துக்கமைய தண்டிக்குமாறும் மனுதாரர் கோரியுள்ளார்.