இந்தியப் பிரதமரின் சிறிலங்கா விஜயம் – வீதிகளை மூடி கடும் பாதுகாப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை சிறிலங்காவிற்கான ஒருநாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இந்திய தேர்தல் முடிவடைந்த பின்னர் சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது   விஜயம் இதுவாகும்.

இவரை வரவேற்கும் உத்தியோகéர்வ நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

இதனிடையே இந்தியப் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பின் பல பகுதிகளில் வீதிகளை மூடி சிறீலங்கா அரசு தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனால் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.