சீனாவிலிருந்து சிறிலங்கா வரவுள்ள தொடருந்து, சொகுசு பஸ்கள்

சிறிலங்கா புகையிரதத் திணைக்களம் சீனாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ள தொடருந்து, மற்றும் சொகுசு பஸ்கள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சிறிலங்கா வரவுள்ளன.

சீனாவில் தயாரிக்கப்படும் S 14ரகத்தைச் சேர்ந்த தொடருந்தே இங்கு வரவுள்ளதாக அதை வடிவமைக்கும் திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும் இவை மலையகப் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

சீனாவிலுள்ள  Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட, அதி நவீன 9 சொகுசு பஸ்களை பெற்றுக் கொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.