தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க வலியுறுத்தும் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர்

அவுஸ்திரேலியாவின் பெருநிலப்பரப்புக்கு வெளியே உள்ள கிறிஸ்துமஸ் தீவில் சிறைவைக்கப்பட்டிருக்கும் பிரியா, நடேசலிங்கம், மற்றும் அவர்களின் இரு குழந்தைகளை விடுவிக்க வேண்டும் என அவுஸ்திரேலியாவின் புதிய உள்துறை அமைச்சர் கரேன் ஆண்டூருஸிடம் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் மால்கம் டர்ன்புல் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

12 53 தமிழ் அகதி குடும்பத்தை விடுவிக்க வலியுறுத்தும் அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர்

தனக்குள்ள அதிகாரத்தைக் கொண்டு இதனை அவர் செய்ய வேண்டும் என தற்போதைய உள்துறை அமைச்சருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வாயிலாக டர்ன்புல் இக்கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்.