மாவோயிஸ்ட்டுக்களுடன் நடத்த மோதலில்  22 இந்திய படையினர் பலி

கடந்த சனி கிழமை இந்தியாவின்  சத்தீஸ்கர் (chhattisgarh )மாநிலத்தின் பிஜப்பூர் பகுதியில் மாவோயிஸ்ட் ஆயுதக் குழுவுடன்  இடம்பெற்ற மோதலில் 22 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற புலனாய்வுத் தகவலைத் தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட காவல்துறையினரும், இராணுவத்தினரும் மாவோயிஸ்ட்களின் மறைவிடத்தை சுற்றிவளைத்து தாக்கிய போதே இந்த  இறப்பு சம்பவம் நடந்துள்ளது.

நான்கு மணிநேரம் இடம்பெற்ற இந்த மோதலில் 22 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 20 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாவோயிஸ்ட் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  பலியான 17 இராணுவத்தினரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.