யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன

யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு 38 ஆண்டுகள் நிறைவு நாள் (சனிக்கிழமை) நினைவு கூரப்பட்டது. இந் நினைவு நாள் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட் தலைமையில் இடம்பெற்றது.
.
இந் நிகழ்வில் கௌரவ யாழ் மாநகரசபை உறுப்பினர்கள், யாழ் மாநகர ஆணையாளர், யாழ் பொதுநூலக பிரதம நூலகர், நூல்நிலைய உத்தியோகத்தர்கள், வாசகர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

தமிழரின் வரலாற்றுச் சான்றாக, தனிப்பெரும் அடையாளமாக இருந்த யாழ்.நூலகம் 1981ஆம் ஆண்டு ஜூன் முதலாம் திகதி பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது என யாழ் மாநகர முதல்வரின் ஊடகப்பிரிவு அதன் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.