நாம் தமிழர் கட்சி நடத்தும் இன எழுச்சிப் போராட்டம்

திருநெல்வேலி, பாளையங்கோட்டையிலுள்ள பெல் மைதானத்தில் நாம் தமிழர் கட்சியினரால் இன்று இரவு நடத்தப்படவுள்ளது. இதில் பல்லாயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளன.

மாலை 6 மணியளவில் ஆரம்பிக்கும் இந்தக் கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் அவர்கள் தலைமை தாங்குகின்றார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்திய அரசாங்கம் நீடித்திருக்கும் இவ்வேளையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் இக்கூட்டத்தினை ஒழுங்குபடுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினரின் படங்கள் பல இங்கு வைக்கப்பட்டுள்ளன.

திருநெல்வேலியில் மிகவும் பிரபலமான மைதானத்திலேயே கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலுள்ள நாம் தமிழர் கட்சி அங்கத்தவர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.