உலக பெண்கள் நாளை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை சித்தரிக்கும் விழிப்புணர்வு சுவரோவியங்கள் வரையும் செயற்திட்டம் இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் ஏற்பாட்டிலும் குறித்த நிலையத்தின் திட்ட முகாமையாளர் எஸ் ஜெயதிலீபனின் வழிகாட்டுதலில் இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் பிரதான வீதி, டேவிட் வீதியில் இடம்பெற்றது.
பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள்ளதாகவும் நாளை குறித்த ஓவியங்களை வரையும் பணிகள் நிறைவடையும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆரம்ப நிகழ்வில் மதகுருக்கள்.சட்டத்துக்கும் மனித உரிமைகளுக்குமான நிலையத்தின் பணிப்பாளர் ரி. சுபாஜினி, சட்டத்தரணி கார்த்திகா, மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.