ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு எங்களுக்கில்லை: இந்தியாவுக்கு வங்கதேசம் பதில்

அந்தமான் கடல் பகுதியில் மீட்கப்பட்ட சுமார் 80 ரோஹிங்கியா அகதிகளை வங்கதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என இந்தியா தெரிவித்திருந்த நிலையில் ரோஹிங்கியா அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு தங்களுக்கில்லை என வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல் மொமன் தெரிவித்துள்ளார்.

“அவர்கள் வங்கதேசத்தவர்கள் கிடையாது, அத்துடன் அவர்கள் மியான்மர் நாட்டவர்கள். வங்கதேச கடல் எல்லையிலிருந்து சுமார் 1,700 கிலோ மீட்டருக்கு அப்பால் அவர்கள் கண்டறியப்பட்டுள்ளார்கள். அதனால் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய பொறுப்பு வங்கதேசத்துக்கு கிடையாது,” என மொமன் தெரிவித்திருக்கிறார்.