காணாமல் ஆக்கப்பட்டவர்களின்  84 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!

வடக்கு மற்றும் கிழக்கில் சிறீலங்கா அரச படைகளினால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை மீட்டுத் தர வலியுறுத்தி   அவர்களது உறவுகள் நீண்ட காலமாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடியலைந்து கொண்டிருக்கும் அவர்களின் உறவினர்களில் இது வரையில்  84 உறவுகள் வயோதிபம் மற்றும் நோயினால்  உயிரிழந்துள்ளனர் .

வவுனியா மாவட்டத்தில் 10 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

வடகிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வீதிகளிலிருந்து தமது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். சர்வதேசத்தின் தலையிடுகளை கோரியும் ஐக்கிய நாடுகள் தமது விடயங்களில் தலையீடு செலுத்தி தீர்வுகளை பெற்றுத்தருமாறு கோரியும் உறவுகள் தமது போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.