பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர்.

கொரோனா தொற்று மற்றும் கிறிஸ்மஸைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 31, நவம்பர் 20 மற்றும் ஜனவரி 08 ஆகிய திகதிகளில் வழங்கப்பட்ட பொது மன்னிப்பு காரணமாக இந்த ஆண்டு சுதந்திர தின மன்னிப்பின் போது விடுதலைக்காக காத்திருக்கும் கைதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக சிறைத்துறை அறிவித்துள்ளது.

இன்று விடுவிக்கப்படவுள்ள பல கைதிகள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த சோதனைகளின் முடிவுகள் கிடைத்தவுடன் விடுவிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீண்ட காலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.