பயங்கரவாதத் தடைச் சட்டத்தை உடனடியாக நீக்க முடியாது – வெளிவிவகாரச் செயலாளர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அம்சங்கள் மறுபரிசீலனை செய்யப்படும். இருப்பினும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் உடனடியாக எந்தத்திருத்தத்தையும் செய்ய முடியாது என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே உடனடியாக அதில் மாற்றங்களை மேற்கொள்ள இடமளிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையால் முன்வைக்கப்பட்டகுற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் எனவும் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியமும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும் வலியுறுத்திய நிலையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.