டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகில் குண்டு வெடிப்பு

இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள  இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு ஒன்று வெடிக்க வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழப்பு மற்றும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது. குண்டு வெடிப்பின் அதிர்வின் காரணமாக சில கட்டிடங்களில் உள்ள கண்ணடிகள் சேதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதையடுத்து சம்பவம் நடைபெற்றுள்ள இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு குண்டு வெடிப்பின் பின்னணி குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.