அகதிகளால் வீண் செலவு – அவுஸ்திரேலியா அமைச்சர் விமர்சனம்

மனுஸ் மற்றும் நவுறு தீவுகளிலிருந்து மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியா அழைத்துத்துச் செல்லப்பட்டு சுமார் ஒரு வருடத்துக்கும் மேலாக மெல்பேர்னிலுள்ள விடுதிகள் மற்றும் தடுப்புமுகாமில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், குறிப்பிட்ட அகதிகளை விடுதிகளில் வைத்து பேணுவது வீண் பணவிரயம் என்பதனாலேயே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்.