இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்

உலக அளவில் கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில், தற்போது வைரஸ் பரவல் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 16,311 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில், தற்போது அதைவிட குறைந்துள்ளது என்றும் அதேசமயம், குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது.

இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,04,66,595 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,51,160 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 16,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 161 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்றைவிட புதிய தொற்று எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு குறைந்துள்ளது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.