நினைவு தூபி இடித்தழிப்பு – தொடரும் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி, நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் தூபி மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தும் யாழ். பல்கலைக் கழக மாணவர்கள் 9 பேர் முன்னெடுத்துவரும் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் இன்றும் தொடர்கின்றது.

1 78 நினைவு தூபி இடித்தழிப்பு - தொடரும் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தால் கடந்த 8 ஆம் திகதி இடித்தழிக்கப்பட்டது.

4 நினைவு தூபி இடித்தழிப்பு - தொடரும் மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்

இந்த செய்தியை அறிந்து மாணவர்களும், அரசியல் பிரதிநிதிகளும் மற்றும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதியில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது