தமிழகத்தில் கன மழை தொடரும்- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்தவகையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“தமிழகத்தில் இன்று முதல் வரும்11 வரை 5 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கன மழை பெய்யும்” என்று கூறியுள்ளது.