சீனாவின் ஆளில்லா விமானங்கள் தரவுகளைத் திருடுகின்றன – அமெரிக்கா

சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா விமானங்கள், பிற நாடுகளில் தரவுகளைத் திருடி, பீஜிங்கில் உள்ள உளவு நிறுவனங்களுக்கு அளிக்கின்றன என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.

சீன – அமெரிக்க வணிகப் போரினிடையே, முன்னெப்போதும் இல்லாத வகையில் சீனாவின் தொழில்நுட்பத் துறையானது கண்காணிப்பை செலுத்துவதால் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா விடுத்துள்ளது. சீனாவைச் சேர்ந்த D J J நிறுவனம் தான், உலகில் பயன்படுத்தப்படும் வணிக ஆளில்லா விமானங்கள் 70% அளவிற்கு உற்பத்தி செய்கிறது. கடந்த 2017ஆம் ஆண்டு இந்த நிறுவனம் தயாரித்த ஆளில்லா விமானங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்தக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.

மேலும் சீன நிறுவனமான ஹுவேய் தயாரிப்புகளை புறக்கணிக்கும்படி தனது நெருங்கிய நட்பு நாடுகளை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.