ஆட்கடத்தலைக் கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு அதிவேகப் படகுகள்

சட்டவிரோத குடியேறிகளை மலேசியாவுக்கு அழைத்துச் செல்லும் கடத்தல் செயல்களை கண்காணிக்க மலேசிய கடற்படைக்கு சுமார் 8.2 மில்லியன் மலேசிய ரிங்கட்டுகள் மதிப்பிலான 11 அதிவேகப் படகுகள் வழங்கப்பட்டுள்ளன. 

குறைந்த எடை மற்றும் அதிகத்திறன் கொண்ட Rigid Hull Inflatable படகுகள் என இது அழைக்கப்படுகின்றது.

சட்டவிரோத குடியேறிகளை வருகையைத் தடுக்க மேற்கொள்ளப்படும் Ops Benteng ரோந்து நடவடிக்கையில் இப்படகுகள் மலாக்கா நீர்ச்சந்தியில் பயன்படுத்தப்படும் எனக் கூறப்படுகின்றது.