மாவீரர் வாரம் 2ம் நாள்-காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா!

காவல்தெய்வங்களின் கார்த்திகைத்திருவிழா
 
நடுகல்லை இடித்தவர்
கோயிலைச் சிதைத்தவர்
நல்லூரான் வீதியில்
அகிம்சையை மறுத்தவர் இவர்களல்லவா
துட்டகைமுனு
எல்லாலன் நடுகல்லை
இன்றும் தொழுவோரே!
இன்று எம் நடுகற்கள்
எங்கள் நெஞ்சில் நிறைந்திருக்க…
நீங்கள் எங்களை தொழும் நாள் தூரமில்லை.

எம் வீரரை நினைவேந்தும் இரண்டாம் நாளில்
எடுப்போம் உறுதி
எமக்குள் ஒன்றாய்!
தங்கும் இல்லந்தோறும்
தரம் சேர்த்து
எங்கும் நிறைந்த
உம்மை நினைவிருத்தி
பொங்கும் எம் இதயத்தை
நிறுத்த
எவனால் முடியும்? என்று
இறுமாப்பாய்
தொடர்வோம்
இருள் விலகும்
எழுவோம்.

-றோய்-