பருத்துறையில் இராணுவத்தினரால் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான இளைஞன்

இன்று அதிகாலை ஒரு மணியளவில் பருத்தித்துறை மந்திகைப் பகுதியில் இராணுவத்தினனின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காலில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் என்ற 22 வயது இளைஞனே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.

இது தொடர்பாக மேலும் அறியவருவதாவது,

மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக இராணுவச் சிப்பாய் ஒருவர் மீது இனந்தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார். இதனையடுத்து தாக்குதல்நடத்தியவர்களை தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை இளைஞன் ஒருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்துச் சென்ற வேளை அவரை  இராணுவத்தினர் மறித்துள்ளனர். அவர் மீறி சென்ற போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.