வவுனியா நகர்ப் பகுதியில் சற்றுமுன் காற்றுடன் கூடிய மழை பொழிந்தது இதன் காரணத்தினால் வவுனியா குடியிருப்பு பூங்காவில் மரம் முறிந்து மின்சார வயரில் விழுந்துள்ளது.
இதே வேளை ஏ9 சாலை தாண்டிக்குளம் பகுதியில் வாகனம் பழுதுபார்க்கும் இடத்தில் தரித்திருந்த கனரக வாகனத்தின் மீது பாரிய மரம் முறிந்து வாகனம் சேதமடைந்த அதேவேளை மின்சார இணைப்பு சேதமடைந்துள்ளது.
இந் நிலையில் வவுனியா ஈச்சங்கும், சுந்தரபுரம், போன்ற கிராமங்களில் விவசாயிகளின் தோட்டப் பயிர்கள் சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாட்களாக வவுனியாவில் கடும் வெப்பமான காலநிலை நிலவியவந்ததுடன் தற்போது மாலை வேளைகளில் காற்றுடன் கூடிய மழை பெய்துவருகின்றமை குறிப்பிடதக்கது.