கொரோனா தொடர்பில் பவித்ரா வன்னியாராச்சி தலைமையில் கலந்துரையாடல்

கொரோனா வைரஸினை கட்டுபடத்துவதற்காக மேற்கொள்ளவுள்ள விசேட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ள சுகாதார அமைச்சினால் உருவாக்கப்பட்டள்ள சிறப்பு செயல்திறன் சீராய்வுக்குழுவின் கூட்டம் இன்றைய தினம் இடம்பெற்றத.

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இதன்போது புதிதாக இனங்காணப்படும் புதிய  தொற்றாளர்களுக்கான பரிசோதனை மற்றும் சிகிச்சை முறைகளை பலப்படுத்துவது, ஊடரங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதன் பின்னர் மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் போக்குவரத்து சேவையினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.