வடக்கு கிழக்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யாழில் போராட்டமொன்றை நேற்று முன்னெடுத்துள்ளனர்.
யாழ் சங்கிலியன் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட இப் பேரணி யாழ் கோவில் வீதியிலுள்ள ஐநா அலுவலகம் வரை பேரணியாகச் சென்றது.
இவ் ஆர்ப்பாட்டத்தின்போது நாட்டின் சுதந்திரம் என்பது சிங்கள மக்களுக்குத்தான், இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணைமீது நம்பிக்கையில்லை சர்வதேச குற்றவியில் நீதிமன்றத்தின் ஊடாக விசாரனை நடாத்தவேண்டும், காணாமல் ஆக்கப்பட்ட எமது எறவுகள் எற்கே என்று வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இதன் யாழ் ஐக்கிய நாடுகள் சபையின் பிராந்திய அலுவலகத்தில் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.