மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்படாது இராணுவத் தளதி

மட்டக்களப்பு கொரோனோ தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் கொடுப்பனவுகள் அறவிடப்பட மாட்டாது என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாட் புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேற்படி முகாமில் நாளாந்தம் வழங்கப்படும் உணவிற்காக பணம் செலுத்த வேண்டியுள்ளமை தொடர்பாக அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டிருந்தனர். இதற்காக 14 நாட்களுக்கும் மூன்று வேளை உணவை பெற்றுக் கொள்ள 7500 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் எனக் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அப்பகுதிக்கு அனுப்பப்பட்ட மக்கள் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை கொரோனா தடுப்பு முகாமில் உள்ளவர்களிடம் இருந்து எவ்வித கொடுப்பனவும் அறவிடப்பட மாட்டாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.