வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு.

வவுனியா புதூர் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

புதூர் காட்டு பகுதியில் நேற்று (05.03) மதியம் 12 மணியளவில் முதிரைமரக்குற்றிகள் கடத்த இருப்பதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பேர்ணான்டு தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடத்த தயாராக இருந்த 15 முதிரை மரக்குற்றிகளும், மரம் அறுக்கும் இயந்திரம், கோடரி, கத்தி மற்றும் பஜாஜ் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியிருந்ததாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

IMG 9de8ea1db2b5aba3698943d316af0acb V வவுனியாவில் பொலிஸாரால் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு.