ஆப்கானில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் – அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு முடிவு

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற போரின் போது போர்க்குற்றங்களில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரையும் விசாரணை செய்வதற்கு அனைத்துலக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த விசாரணைகளில் அமெரிக்க படையினர், தலிபான் படையினர் உட்பட அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என நீதியாளர் பியோற் கொப்மன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவவும் தலிபான் படையினரும் அண்மையில் அமைதி உடன்பாட்டில் கையொப்பமிட்ட பின்னர் இந்த அறிவித்தல் வெளிவந்துள்ளது. அமெரிக்காவின் எதிர்ப்புக்களையும் மீறி முற்று முழுதான விசாரணைகளை மேற்கொள்ள சட்டவாளர் பற்றோ பென்சூடா முயற்சி செய்து வருகின்றார்.

அனைத்துலக நீதிமன்றத்தில் அமெரிக்கா உறுப்பு நாடாக இல்லாதபோதும், அவர்கள் ஆப்பகானிஸ்த்தானில் மேற்கொண்ட குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் ஏனெனில் ஆப்பானிஸ்த்தான் உறுப்பு நாடாக உள்ளது என பற்றோ தெரிவித்துள்ளார்.

இந்த விசாரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் அமெரிக்கா அனைத்துலக நீதிமன்ற பணியாளர்கள் மீது கடந்த ஆண்டு பயணத்தடையையும் கொண்டுவந்திருந்தது.