விடுதலைப்புலிகள் பற்றி பேசுவதற்கு சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை

தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றி கதைப்பதற்கோ, விமர்சிப்பதற்கோ, கொச்சைப்படுத்துவதற்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் கிடையாது என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார்.

நல்லூரில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகள் சகோதரப் படுகொலையை மேற்கொண்டு தான் தனி இயக்கமாக வளர்ந்து வந்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

அவர் அவ்வாறு வெளியிட்ட விடயத்திற்கு தனது எதிர்ப்பினை தெரிவித்தே சட்டத்தரணி சுகாஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கோ சுமந்திரனுக்கோ எந்தவித அருகதையும் கிடையாது எனவும், தமிழ் மக்கள் தான் விடுதலைப்புலிகள் விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்கள் எனவே விடுதலைப்புலிகளைப் பற்றி கதைப்பதற்கு எம். ஏ. சுமந்திரனுக்கு எந்தவித அருகதையும் இல்லை எனத் தெரிவித்தார்.