இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இலங்கையில் நடைபெற்ற ஆட்சி மாற்றம் மீண்டும் ஊடகவியலாளர்களையும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களையும் இலக்கு வைத்து செயற்படும் களத்தை உருவாக்கி கொடுத்துள்ளது. கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தின் பௌத்த பேரினவாத சிந்தனைகளுக்கு வடிவம் கொடுக்கும் செயற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களில் இருந்து வெளியேறியுள்ளது.இதைவிட இலங்கையின் சிவில் நிர்வாக செயற்பாடுகளில் இராணுவம் நேரடியாக களம் இறக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரத்தை கோட்டபாய அரசாங்கம் இராணுவத்திற்கு சட்ட ரீதியாக வழங்கியுள்ளது. இதன் அடிப்படையில் போக்குவரத்து பொலீஸார் முதல் வேலைவாய்ப்புக்கான நேர்காணல் வரை அனைத்து நடவடிக்கைகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.Media genocide இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் செயற்பட்ட ஆயுதக் குழுக்கள், அதாவது இன்று வரை இராணுவ ஒட்டுக் குழுக்களாக செயற்பட்டு வந்து, இலங்கை அரசிடம் சம்பளம் பெற்று வந்த குழுக்கள் மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளன. அவர்களது முதலாவது இலக்கு ஊடகவியலாளர்களே.
அதுவும் தமிழர்களின் உரிமைப் போராட்டம், அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் அடக்குமுறைகள், மண்பறிப்பு, அதிகார துஸ்ப்பிரயோகம், ஊழல் நடவடிக்கைகள், ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் செய்திகளையும் கட்டுரைகளையும் எழுதி வந்த மட்டக்களப்பு ஊடகவியலாளர்கள் இன்று அரச மற்றும் ஆயுதக் குழுக்களினால் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் .

அத்துடன் இவ்வூடகவியலாளர்கள், ஊடக சுதந்திரம் மற்றும் இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல் போன ஊடகவியலாளர்களுக்காக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்துவது தொடர்பிலும் அவர்கள் அச்சுறுத்தல்களை எதிர் நோக்க வேண்டியவர்களாக உள்ளனர். கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த குழுக்கள் தற்போது நேரடியாக களத்தில் இறங்கி செயற்பட ஆரம்பித்துள்ளன.

சில ஊடகவியலாளர்கள் மீது தொடர்ச்சியாக பொலீஸ் விசாரணை மற்றும் புலனாய்வுத் துறையின் விசாரணைகள் நடத்தப்பட்டன. அவர்களுக்கு எதிராக பயங்கரவாத பிரிவு மற்றும் சில புலனாய்வு அதிகாரிகள் ஊடாக பல பொய்யான தகவல்களை உள்ளடக்கிய கோவைகள் பல தடவைகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சிலர் கொழும்பில் உள்ள பயங்கரவாத விசாரணை பிரிவினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.625.500.560.350.160.300.053.800.900.160.90 இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

அதுமட்டுமின்றி அதனை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் பின்தொடரப்பட்டதுடன், ஊடகவியலாளர்களின் விபரங்களை சில புலனாய்வு அதிகாரிகள் மறைமுகமாகவும் சில அரச அதிகாரிகள் ஊடாகவும் திரட்டி வருகின்றனர் .

அத்துடன் சில ஊடகவியலாளர்கள் புலிகளுடன் தொடர்பை வைத்துள்ளார்கள் என்று கூறி அவர்களது வங்கி கணக்கு உட்பட வாழ்வாதாரம் வரை அலசி ஆராய்ந்து கொழும்பிற்கு தகவல்களை அனுப்பி இருந்தனர்.இதன் தொடர்ச்சியாகவே அண்மையில் மட்டு ஊடக அமையத்திற்குள் சில ஊடகவியலாளர்களுக்கு எதிராக மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் போடப்பட்டிருந்தன.

ஆனால் இது குறித்து பெரிதும் அலட்டிக் கொள்ளாத பாதுகாப்பு தரப்பு இதனை எடுத்த எடுப்பிலேயே வெளிநாடு செல்வதற்கு திட்டமிட்டு செய்யப்பட்ட செயல் என்று சிலரூடாக பொய்ப் பரப்புரைகளை பரப்பி வந்துடன், அச்சுறுத்தல்களுக்கு உள்ளான ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தவே இல்லை.
சம்பவத்தை நீர்த்துப்போகச் செய்தல் அல்லது திசை திருப்ப செய்தல் இதை தற்போது இலங்கையில் ஒரு உத்தியாகவே சில குழுக்களை வைத்து அரசாங்கம் கையாண்டு வருகின்றது.

பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்தால் கூட அதனை வெளிநாடு போவதற்கு பயங்கரவாத விசாரணைக்கு சென்று வந்துள்ளார்கள் என்று கூறும் அளவுக்கு நிலமை மோசமாக உள்ளது. அதனை நம்பும் ஒரு கூட்டமும் உண்டு.இதைவிட இது போன்ற சம்பவங்களினால் இலங்கை அரசுக்கு சர்வதேச ரீதியில் அபகீர்த்தி ஏற்படும் என்பதற்காகவும் அவ்வாறு ஏற்படாது இருப்பதற்காக இது போன்ற சம்பவங்களை மூடி மறைத்து பூசி மெழுகும் தரப்புக்களும் உண்டு.thumb large poli6987 copy இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

இதனால் உண்மையாக பாதிக்கப்படும், உயிர் அச்சுறுத்தலை எதிர் கொள்ளும் ஊடகவியலாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர்.மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்களது ஊழல் செயற்பாடுகளுக்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகவியலாளர்களை முடக்க வேண்டிய தேவை சில குழுக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தக் குழுக்களில் ஊழல் செய்த உயர் அரச அதிகாரிகள் முதல் காணி மோசடி செய்பவர்கள், முன்னாள் ஆயுத குழுக்கள், சில அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இயங்கும் சில அரச புலனாய்வாளர்கள், சில வெளிநாட்டு உளவு முகவர்கள் என பலரும் உள்ளனர்.

இவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி முடக்கி அவர்களை ஊடக செயற்பாடுகளில் இருந்து இல்லாமல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் செயற்பட்டு வருகின்றனர்.DSCN0182 இரும்புக் கரங்களால் இறுக்கப்படுகின்றன எங்கள் குரல் வளைகள் -மட்டூரான்

அதற்காக பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். கடந்த காலங்களில் மறைமுகமாக செயற்பட்டு வந்த இந்த நபர்கள் தற்போது நேரடியாக செயற்பட ஆரம்பித்துள்ளனர்.

சில ஊடகவியலாளர்கள் மீது பல விசாரணைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் ஊடாக அச்சுறுத்தியும் அதனால் குறித்த ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளை முடக்க முடியவில்லை என்பதற்காக தற்போது மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்களை வீசி குடும்ப அங்கத்தவர்களை உளவியல் ரீதியாக அச்சுறுத்தி குடும்ப உறுப்பினர்கள் ஊடாக குறித்த ஊடகவியலாளர்களை முடக்கும் வகையில் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்ற வாரம் கூட ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்ற புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவரை விசாரணை செய்ய வேண்டும் என்று தேடியுள்ளனர். இவ்வாறு புலனாய்வுத்துறை அதிகாரிகளை பல தடவைகள் ஏவிவிட்டும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துகின்றனர்.

ஏற்கனவே ஊடகவியலாளர் நடேசன், ஊடகப் பணியாளர்கள் கண்ணமுத்து அரசகுமார் மற்றும் கிருஷ்ணபிள்ளை யோகாகுமார் இங்கு படுகொலை செய்யப்பட்டனர். அதேவகையில் எதிர்வரும் காலத்தில் இந்த கொலைக் குழுக்களால் இங்கு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.