திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

மன்னார் மாவட்டத்தில் பாடல் பெற்ற தளமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில், மஹா சிவராத்திரி நிகழ்வானது மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்பாக யாழ்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி பகுதிகளில் இருந்தும் நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.

அதேவேளை சிங்கள பகுதிகளில் இருந்தும் அனேக பக்தர்கள் சிவராத்திரி நிகழ்வில் கலந்து கொள்ள வருகை தந்திருந்தனர்.

நேற்று காலை தொடக்கம் பல்வேறுபட்ட சமய நிகழ்வுகள் பூஜைகள் இடம்பெற்றதுடன் பல்வேறு சொற்பொழிவுகள், மதம்சார் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதனைத்தொடர்ந்து நேற்றைய தினம் இரவு பூசையும் இடம்பெற்றது.

மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, நிகழ்வு இடம்பெறும் பிரதேசம் முழுவதும் சுமார் 300 இற்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர்.

மேலும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
t2 திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு

t3 திருக்கேதீஸ்வர ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி நிகழ்வு