ஜெர்மனியில் துப்பாக்கிச் சூடு;9 பேர் உயிரிழப்பு

ஜெர்மனி ஹனூ நகரில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இனந் தெரியாத நபர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டால் 9 பேர் பலியாகியதுடன், 5 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜேர்மனியின் பேங்க்பிரட்டின் கிழக்கில் ஹனூ பகுதியில் இருக்கும் ஷீஷா பாரில் ஜேர்மன் நேரப்படி இரவு 10.15 மணிக்கு காரில் வந்த இனந் தெரியாத நபரே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் தாக்குதலுக்குப் பின்னர் அவரது வீட்டில் இறந்து கிடைக்கக் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.தாக்குதலுக்கான சரியான காரணம் இதுவரை தெரியவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.