150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன- மஹிந்த தேசப்பிரிய

150 க்கும் அதிகமான புதிய கட்சிகளுக்கான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.அது தொடர்பான தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது பாராளுமன்ற தேர்தல் மற்றும் புதிய கட்சிகளை பதிவு செய்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிகளவில் அவதானத்தை செலுத்தி வருவதாகவும், அரசியல் கட்சிகளின் பெயர்கள் மற்றும் சின்னங்களை மாற்றுவது தொடர்பில் பிரச்சினைகளும் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்